ஆப்நகரம்

கிராமசபை கூட்டங்கள் தமிழகம் முழுவதும் ரத்து!

கொரோனோ தொற்று அச்சம் காரணமாக காந்தி ஜெயந்தியன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 1 Oct 2020, 9:40 pm
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகள் உத்தரவின்படி சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். அது தவிர, சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தியன்றும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும். ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமசபை கூட்டத்தை நடத்துவார்கள்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த கூட்டங்களில் ஊராட்சி நிர்வாகம், செலவுகள், பொது மக்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும். பொதுமக்கள் எழுப்பும் கோரிக்கைகள் கிராம சபை கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நிறைவேற்றப்படும். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அண்மையில் நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனிடையே, காந்தி ஜெயந்தி நாளன்று உரிய தடுப்பு நடவடிக்கைகளுடன் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கூட்டங்களின் போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற திமுக மற்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

காந்தி ஜெயந்தி பேச்சு!

மத்திய பாஜ அரசு கொண்டு வந்து, அதிமுக ஆதரித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், கட்சி பேரம் பாராமல் தங்களது கிராமசபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், கொரோனா காரணமாக காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெறும் ஊராட்சி கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக, கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படாது என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி