ஆப்நகரம்

முதலில் தூக்கி எறிவார்கள்; பின்பு தான் மகுடம் சூட்டுவார்கள்; காந்தி வழியில் கமல்ஹாசன்!

காந்தியின் வரிகளை எடுத்துரைத்து, தற்போதைய அரசியல் சூழலுக்கு நடிகர் கமல் ஹாசன் வலுவூட்டியுள்ளார்.

TNN 2 Oct 2017, 9:59 am
சென்னை: காந்தியின் வரிகளை எடுத்துரைத்து, தற்போதைய அரசியல் சூழலுக்கு நடிகர் கமல் ஹாசன் வலுவூட்டியுள்ளார்.
Samayam Tamil gandhiji words impart strength we need now
முதலில் தூக்கி எறிவார்கள்; பின்பு தான் மகுடம் சூட்டுவார்கள்; காந்தி வழியில் கமல்ஹாசன்!


மகாத்மா காந்தியின் 149வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தியின் கருத்துக்களை எடுத்துரைக்கும் வண்ணம், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் தனது அரசியல் பிரவேசம் குறித்து, தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், காந்தியை நினைவு கூர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முதலில் நம்மை ஒதுக்குவார்கள், பின்னர் நம்மை பார்த்து நகைப்பார்கள்.

இதையடுத்து நம்மிடம் சண்டையிடுவார்கள். அதன் பின்னரே நாம் வெற்றியடைவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

First they ignore you then they laugh at you then they fight you and then you win- Gandhi jiHis words impart strength we need now— Kamal Haasan (@ikamalhaasan) October 2, 2017 காந்தியின் இந்த வார்த்தைகள் அளிக்கும் நம்பிக்கை, தற்போதைய சூழலுக்கு மிகவும் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Gandhiji words impart strength we need now.

அடுத்த செய்தி