ஆப்நகரம்

பழிக்குப் பழி: வெடி குண்டு வீசி 3 ரவுடிகள் பலி

புதுச்சேரியில், ரவுடிகளுக்குள் நடந்த கோஷ்டி மோதலில் 3 ரவுடிகளை வெட்டியும் வெடிகுண்டு வீசியும் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 19 Oct 2017, 12:49 pm
புதுச்சேரியில், ரவுடிகளுக்குள் நடந்த கோஷ்டி மோதலில் 3 ரவுடிகளை வெட்டியும் வெடிகுண்டு வீசியும் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil gang war among rowdies in pondicherry 3 killed
பழிக்குப் பழி: வெடி குண்டு வீசி 3 ரவுடிகள் பலி


மேட்டுப்பாளையம் பகுதியில் ரவுடிகளுக்கிடையே நடந்த மோதலில், இரு தாரப்பினரும் அறுவாளால் வெட்டிக்கொண்டர். அதன் பிறகு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இந்த மோதலில் ஐ.ஐ.டி எதிரில் உள்ள ராம்நகரில் ஜெரால்டு, சதீஷ் மற்றும் ஞானசேகர் ஆகிய 3 ரவுடிகள், அரிவாளால் வெட்டியும் வெடிகுண்டு வீசியும் கொல்லப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் , கொலை செய்யப்பட்டவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொல்லப்பட்டவர்களில் 2 பேர் மீது புதுச்சேரியின் பல்வேறு காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரவுடி பொரையூர் சுரேஷ் கொலையில் தொடர்புடையவர்களை , பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் இந்த ரவுடிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

gang war among rowdies in pondicherry 3 killed

அடுத்த செய்தி