ஆப்நகரம்

திமுகவில் உட்கட்சி மோதல் வெடித்தது; முன்னாள் எம்.பி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!

திமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து, பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சென்றுள்ளது.

TNN 28 Oct 2017, 3:26 pm
சேலம்: திமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து, பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சென்றுள்ளது.
Samayam Tamil gang war started in dmk party
திமுகவில் உட்கட்சி மோதல் வெடித்தது; முன்னாள் எம்.பி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!


சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திமுகவினர், வீரபாண்டி ராஜா ஒரு அணியாகவும், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

இதையடுத்து சேலத்தில் 27வது வார்டு அரிசிப்பாளையத்தில், ராஜேந்திரன் தரப்பினர் தி.மு.க உறுப்பினர் படிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது வீரபாண்டி ராஜா ஆதரவாளரான முன்னாள் எம்.பி செல்வகணபதியும் உறுப்பினர் படிவத்தைக் கொடுக்கத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் தெருவில் நின்று மோதிக் கொண்டனர். மேலும் கத்தி கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இதில் 4 பேர் காயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வீரபாண்டி ராஜா ஆதரவாளரானும், முன்னாள் எம்.பியுமான செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Gang war started in DMK Party.

அடுத்த செய்தி