ஆப்நகரம்

அரசு விழா மேடையில் கருணாஸ் பேச்சால் சலசலப்பு; அதிமுகவினர் ஷாக்!

அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற அரசு விழாவில் நடிகர் கருணாஸ் பேசியது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியினர் கருணாஸின் பேச்சை கேட்டு அதிர்ந்து போயுள்ளனர்

Samayam Tamil 21 Nov 2019, 4:24 pm
பரமக்குடி: அமைச்சர், மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற அரசு விழாவில் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவும், நடிகருமான கருணாஸ் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கருணாஸ்
கருணாஸ்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நேற்று விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பாண்டி, பரமக்குடி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன், திருவாடானை சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ நடிகர் கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியா வர கோத்தபய ராஜபக்சவுக்கு அழைப்பு: ராமதாஸ் அதிர்ச்சி!!

விழாவில் பேசிய கருணாஸ், அரசியல் என்பது பந்தாவாக மாறிவரும் சூழலில், அம்மா காலத்தில் எப்படி பணி செய்தாரோ அதே போல் இன்னமும் அமைச்சர் உதயகுமார் எளிமையாக பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில் எனது தொகுதியான திருவாடனை தொகுதி மீதும் அவர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாட்களில் நான் என் தொகுதிக்குள் செல்ல முடியாத நிலை இருந்தது என பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் மணிகண்டன் குறித்து சூசகமாக தெரிவித்த கருணாஸ், பரமக்குடி பகுதியில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் வெளிப்படையாக போலீசார் அனுமதியோடு வெகு ஜோராக நடந்து வருகிறது.

தமிழகத்தில் மின் தடைக்கு வாய்ப்பு இருக்கிறதா? அமைச்சர் தங்கமணி பதில் இதுதான்!

இது குறித்து ஏற்கனவே நான் காவல்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே, பரமக்குடி பகுதியில் நடந்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகிரங்கமாக பேசி சலசலப்பை ஏற்படுத்தினார்.

திருவாரூர் மாணவனின் லீவ் லெட்டர்: குவியும் பாராட்டுக்கள்!!

அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற அரசு விழாவில் வெளிப்படையாக நடக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் பேசியது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியினர் கருணாஸின் பேச்சை கேட்டு அதிர்ந்து போயுள்ளனர்.

அடுத்த செய்தி