ஆப்நகரம்

ரூ.1 லட்சம் மதிப்புடைய கஞ்சா பறிமுதல்

திருச்சியில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 21 Jun 2016, 8:01 pm
திருச்சியில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ganja worthy of rs 1 lakh seized in trichy
ரூ.1 லட்சம் மதிப்புடைய கஞ்சா பறிமுதல்


அங்குள்ள திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னம்மா. இவர், கஞ்சா கடத்தல் தொடர்பாக, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், அவரது வீட்டில் இருந்து நாள்தோறும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், திருவெறும்பூரியில் உள்ள சின்னம்மாவின் வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாகும். மேலும், இதுதொடர்பாக, அங்கிருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி