ஆப்நகரம்

கோயம்பேடு பொங்கல் சிறப்புச் சந்தையில் 450 டன் குப்பை

கோயம்பேடு பொங்கல் சிறப்புச் சந்தையில் 450 டன் குப்பை மலை போல குவிந்துள்ளது.

Samayam Tamil 18 Jan 2018, 3:39 pm
கோயம்பேடு பொங்கல் சிறப்புச் சந்தையில் 450 டன் குப்பை மலை போல குவிந்துள்ளது.
Samayam Tamil garbage cleaned from pongal special market
கோயம்பேடு பொங்கல் சிறப்புச் சந்தையில் 450 டன் குப்பை


பொங்கல் திருநாளை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு சந்தை நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற சந்தையில் அப்பகுதியே குப்பை மேடாக மாறியது.

இச்சந்தையின் நிர்வாகக் குழு குப்பையை புதன்கிழமையன்று அகற்றியுள்ளது. மொத்தம் 450 டன் குப்பை சந்தையில் குவிந்திருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையான பொங்கல் விடுமுறை நாட்களின்போது மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் மட்டும் 40 டன் குப்பை குவிந்திருந்தது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

இந்த 5 நாட்களில் மட்டும் மெரினா கடற்கரையில் 25 டன் குப்பை குவிந்துள்ளது. பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் இருந்து 15 டன் குப்பை குப்பை குவிந்துள்ளது.

அடுத்த செய்தி