ஆப்நகரம்

சென்னையில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் படுகாயம்!

சென்னையில் உள்ள திருமங்கலம் மேற்கு அண்ணா நகர் பகுதியில், கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில், சுந்தர மூர்த்தி என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

Samayam Tamil 9 Mar 2018, 12:58 pm
சென்னையில் உள்ள திருமங்கலம் மேற்கு அண்ணா நகர் பகுதியில், கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில், சுந்தர மூர்த்தி என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
Samayam Tamil gas cylinder blast in thirumangalam anna nagar west chennai
சென்னையில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் படுகாயம்!

திருமங்கலம் மேற்கு அண்ணா நகரில் உள்ள திருஞானசம்பந்தர் தெருவில் சுந்தர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் இணைப்பில் நேற்றிரவு கசிவு ஏற்பட்டு , கேஸ் வெளியில் கசிந்துள்ளது.

இதனால் கேஸ் வீடு முழுவதும் பரவியுள்ளது. காலையில் எழுந்த சுந்தர மூர்த்தி மின்சார விளக்கின் சுவிட்சை போட்டதும் கேஸ் வெடித்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுந்தர மூர்த்தியை பக்கத்து வீட்டினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது சுந்தர மூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி