ஆப்நகரம்

அரசியல் பிரவேசத்தை மக்கள் முடிவு செய்வார்கள்: கௌதமி

நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து அவரது மனைவியான நடிகை கௌதமியும் அரசியல் பேச்சைத் தொடங்கியுள்ளார்.

TNN 7 Oct 2017, 6:25 pm
நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து அவரது மனைவியான நடிகை கௌதமியும் அரசியல் பேச்சைத் தொடங்கியுள்ளார்.
Samayam Tamil gauthami talks on politics
அரசியல் பிரவேசத்தை மக்கள் முடிவு செய்வார்கள்: கௌதமி


நடிகர் கமல்ஹாசன் முதல்வராக விரும்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து அவரது மனைவியான நடிகை கௌதமியும் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கௌதமி, “அரசியலில் இந்த தலைமுறைக்கு ஏற்றவர் யாரோ, அவருக்கு ஆதரவு தர வேண்டியது நம்முடைய கடமை. அரசியலுக்கு யார் வரவேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

கொசு கடித்து மனிதர்கள் உயிரிழப்பது மிகப்பெரிய கொடுமை என்றும் கொசுவை ஒழிக்க நாம் அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி