ஆப்நகரம்

74 வயதில் குழந்தை பெற்றது சாதனையல்ல: மருத்துவர்கள் வேதனை

ஆந்திராவை சேர்ந்த 74 வயது பெண்மணி இரட்டை குழந்தை பிரசவித்த சம்பவத்துக்கு மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Samayam Tamil 7 Sep 2019, 7:07 pm
இப்போதைய காலத்தில் எல்லாமே சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. பணமிருந்தால் நிலாவுக்கு என்ன செவ்வாய் கிரகத்துக்கே சென்று வரலாம். அப்படிப்பட்ட சூழலிலும் நாம் வியந்து பார்க்கும் செய்தியாகவே இந்த மூதாட்டியின் பிரசவம் உள்ளது. 70 வயதுக்கு மேல் மாதவிடாய் சுழற்சி இருக்குமா போன்ற கேள்விகளுக்கு, இரட்டையர்களை ஈன்ற இந்த 74 வயதான மூதாட்டி பதிலாக அமைகிறார்.
Samayam Tamil ap women2


இந்த நிகழ்வு நாட்டில் பலரை வியப்பில் ஆழ்த்தினாலும், மருத்துவர்கள் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது என வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கரு உருவாக்கும் மருத்துவர் ஜெய்தீப் மல்ஹோத்ரா என்பவர் கூறுகையில், “சில மருத்துவர்கள் பணத்துக்காக இதுபோன்ற நெறியற்ற செயல்களை செய்கிறார்கள். சமயங்களில் இதுமாதிரியான செயல்களால், நோயாளிகள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும்.’’

இந்த செயலை பெரும்பாலான மருத்துவர்கள் எதிர்க்கவே செய்கிறார்கள். “பெண் ஒருவர் 74 வயதில் கருவை சுமப்பதால் சமயங்களில் சம்பந்தப்பட்ட நபரின் இதயம் செயலிழக்கலாம். கர்பமாக இருக்கும்போது அதிகளவு ரத்தம் வெளியேறலாம். இதுபோன்ற செயல்கள் ஆபத்தானதே’’ என்கிறார். இதுபோன்ற செயல்கள் மிகவும் ஆபத்தானவை’’ என்கிறார் மருத்துவர் சங்கிதா ஆனந்த்.

பல மருத்துவர்கள் 74 வயதில் பிரசவித்த பெண் உயிரோடு இருப்பதை வியப்புடன் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் கரு உருவாக்க அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ஹார்மோன்களால் நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். 42 வயதை கடக்கும் பெண்கள் கர்பமடைவது ஆபத்து என்பது பெரியவர்கள் உட்பட பெரும்பாலானவர்களின் அறிவுரையாக உள்ளது.

இதற்கிடையில், கடந்த 2015-16 ஆம் ஆண்டில் செயற்கை கருதரித்தல் வழிமுறைகள் குறித்து சட்டம் இயற்ற மத்திய அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அரசுக்கு அளித்த பரிந்துறையில் 52 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டுமே செயற்கையாக கருவுற அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது. ”ஒருவேலை இந்த சட்டம் இயற்ற பட்டிருந்தால் 74 வயதில் குழந்தை பெற்ற பெண் உட்பட இந்த விவகாரத்தில் தொடர்புடை மருத்துவர்கள் உட்பட பலர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பார்கள்’’ என ஆதங்கத்தை மருத்துவர்கள் கொட்டி தீர்க்கிறார்கள்.

அடுத்த செய்தி