ஆப்நகரம்

லோக் ஆயுக்தா உறுப்பினர் பெயர் பரிந்துரை; சர்ச்சையில் சிக்கிய கிரிஜா வைத்தியநாதன் கணவர்!

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவிற்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் கணவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Mar 2019, 5:30 pm
அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் ஊழலில் ஈடுபட்டால், அவர்களையும் விசாரிக்கும் வகையில் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. இது கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வேண்டும்.
Samayam Tamil Girija


ஆனால் இதுவரை தமிழக அரசு அமைக்கவில்லை. இதற்கு உச்சநீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், லோக் ஆயுக்தா அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் பணி மட்டும் தாமதாகி வருகிறது. இது விரைவில் நிறைவு பெற்று விடும். ஆதலால் 8 வார கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், உறுப்பினர்கள் தேர்வு 8 வாரத்திற்குள்ளும், அடுத்த 4 வாரத்திற்குள் நியமிக்கவும் வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் லோக் ஆயுக்தாவின் உறுப்பினர் பதவிக்கு கிரிஜா வைத்தியநாதனின் கணவர் வைத்தியநாதன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ஆனால் நீதிமன்றத்தில் எந்தவொரு வழக்கையும் முன்னெடுக்காதவர் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் ஒரு நீதிபதிக்கு உரித்தான அதிகாரங்கள் கொண்ட லோக் ஆயுக்தா உறுப்பினர் பதவிக்கு, வைத்தியநாதன் பெயர் எப்படி பரிந்துரை செய்யப்பட்டது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி