ஆப்நகரம்

இந்த விஷயத்துக்கு இப்படி பண்ணிட்டியே; ரயில்முன் பாய்ந்து உயிரைவிட்ட மாணவியின் கதை!

பள்ளி மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Apr 2019, 6:46 pm
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த மாணவி காவ்யா(17). இவர் பழைய நகரின் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வு எழுதியவர். இந்நிலையில் நேற்று காலை தேர்வு முடிவுகள் வெளியானது.
Samayam Tamil Suicide


அதில் அவர் மிகக் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவி, பூண்டியங்குப்பம் ரயில் பாதையில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வில் தோல்வி அடைந்தவர்களையே தேற்றி, நல்ல நிலைக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறோம். இந்நிலையில் மதிப்பெண் குறைந்ததால், இப்படியொரு விபரீத முடிவை எடுத்த நிகழ்வு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற மன உளைச்சலில் மாணவிகள் இருந்தால், உடனே 104 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 044-24640050 என்ற ஸ்நேகா தற்கொலை உதவி எண்ணிற்கும் அழைக்கலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி