ஆப்நகரம்

கல்லூரி மாணவிக்கு லிஃப்டில் பாலியல் தொல்லை- பல்கலைக்கழக ஊழியர் கைது

பல்கலைக்கழக லிஃப்டில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற லிஃப்ட் ஆப்ரேட்டரை மறைமலை நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 23 Nov 2018, 5:19 pm
சென்னையை அருகேவுள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அதே கல்லூரியில் லிஃப்ட் ஆஃப்ரேட்டராக பணியாற்றி வரும் ஊழியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Samayam Tamil srm-lift-operator
லிப்டில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை..!!


காட்டாங்குளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவரி ஒருவர், தன்னுடன் படிக்கும் சக மாணவியை சந்திக்க லிஃப் மூலம் சென்றுள்ளார்.

அப்போது அதே பல்கலைக்கழகத்தில் லிஃப்ட் இயக்கும் பணி செய்து வரும் அர்ஜூன் என்பவர், உள்ளே வந்த மாணவியின் கண் முன் சுய இன்பம் அனுபவிக்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பதற்றமடைந்த மாணவி, கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட சக மாணவர்கள், லிஃப்ட்டை தரையிறக்கி மாணவியை காப்பாற்றினர். இதைதொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பல்கலைகழக் நிர்வாகத்திடமும் காவல் நிலையத்திலும் சக மாணவர்கள் புகார் அளித்தனர்.

மேலும், மாணவர்கள் சாலை மறியல் மற்றும் பல்கலைகழகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுதது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்க முயன்ற லிப்ட் ஆப்ரேட்டரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி