சென்னை அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஆத்திரமடைந்த மாணவ, மாணவியர் கல்லூரி, விடுதிகளில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த கல்லூரிக்கு ஜனவரி 3 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஸ்ரீலிங்கபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ரெட்டி மகள் துருவ ராகமௌனிகா . இவர் சென்னை செம்மஞ்சேரி தனியார் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் புதன்கிழமை மௌனிகா தனியாக இருந்தாராம். நண்பகல் வகுப்பு முடித்து வந்த மாணவிகள், மௌனிகா அறையில் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். செம்மஞ்சேரி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில், மௌனிகா கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் காப்பியடித்ததாகவும், அதை ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்து காணப்பட்டது தெரியவந்தது. மேலும் இதானால் அவர் தற்கொலை செய்தார் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கல்லூரி மற்றும் விடுதிகளில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். நிலையை கட்டுக்குள் கொண்டு வர கல்லூரி நிர்வாகம் காவல்துறையின் ஒத்துழைப்பை நாடியது. அதனால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த கல்லூரிக்கு ஜனவரி 3 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஸ்ரீலிங்கபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ரெட்டி மகள் துருவ ராகமௌனிகா . இவர் சென்னை செம்மஞ்சேரி தனியார் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் புதன்கிழமை மௌனிகா தனியாக இருந்தாராம். நண்பகல் வகுப்பு முடித்து வந்த மாணவிகள், மௌனிகா அறையில் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். செம்மஞ்சேரி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில், மௌனிகா கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் காப்பியடித்ததாகவும், அதை ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்து காணப்பட்டது தெரியவந்தது. மேலும் இதானால் அவர் தற்கொலை செய்தார் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கல்லூரி மற்றும் விடுதிகளில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். நிலையை கட்டுக்குள் கொண்டு வர கல்லூரி நிர்வாகம் காவல்துறையின் ஒத்துழைப்பை நாடியது. அதனால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த கல்லூரிக்கு ஜனவரி 3 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.