ஆப்நகரம்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசே மதிக்கவில்லை; கொந்தளித்த பாமக!

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு என்று பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Mar 2018, 11:24 pm
திருச்சி: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு என்று பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil cauvery issue
கொந்தளித்த பாமக!


திருச்சியில் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, மாநிலத் துணைத் தலைவர் கண்ணதாசன், மாவட்டச் செயலாளர் திலீப் குமார், மாநில அமைப்பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஜி.கே.மணி, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாயப் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிய, இன்னும் ஒருவாரமே உள்ளது. ஆனால் மத்திய அரசு மௌனம் காக்கிறது.

தமிழக அரசும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசே மதிக்கவில்லை என்றால், வேறு யார் மதிப்பார்கள்? தமிழகத்தை வஞ்சிப்பதே இவர்களுக்கு வேலை.

பாமக தேசியக் கட்சிகள், திராவிடக் கட்சிகளுடன் பாமக கூட்டணி வைக்காது என்று ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார்.

GK Mani slams central government about the cauvery issue.

அடுத்த செய்தி