ஆப்நகரம்

நெசவாளர்களுக்கு உதவித்தொகை - ஜி.கே.வாசன் வேண்டுகோள்!

நெசவாளர்களுக்கு உதவித்தொகையை தாமதமில்லாமல் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Samayam Tamil 7 Jun 2022, 1:38 pm
சமர்த் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற கைத்தறி நெசவாளர்களுக்கு அளிக்கவேண்டிய உதவித்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil ஜிகே வாசன்
ஜிகே வாசன்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் கைத்தறி நெசவு திறன் மேம்பாட்டு பயிற்சி கைத்தறியில் புதுமை புகுத்துதல் திட்டம் மூலம் மத்திய அரசின் ஜவுளித்துறையின் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு “சமர்த் திட்டம் ” என்கிற பெயரில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவது வரவேற்கதக்கது. தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்கள் அதிகமுள்ள பகுதியான காஞ்சிபுரம், கும்பகோணம், ஈரோடு, பரமக்குடி ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் ஜவுளித்துறையின் சார்பாக, தமிழ்நாடு கைத்தறிதுறை சரக உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி திட்டத்தில் கூட்டுறவு சங்க நெசவாளர்களும், தனியார் நெசவாளர்களும் 40 முதல் 45 நபர்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறும் நெசவாளர்களுக்கு பயிற்சி முகாமில் நாள் ஒன்றுக்கு ரூ.300/- வீதம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்பின் மூலம் இதுவரை 1500 கைத்தறி நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை இதுவரை தமிழ்நாடு கைத்தறித்துறை சரக உதவி இயக்குனர் அலுவலகம் வழங்கப்படவில்லை.
திமுகவை சீண்டுகிறாரா கே.எஸ்.அழகிரி? - கூட்டணியில் விரிசல்!
எனவே, நெசவாளர்களின் நலன் கருதி இதுவரை பயிற்சிப்பெற்ற கைத்தறி நெசவாளர்களுக்கும், தற்பொழுது பயிற்சி பெறும் நெசவாளர்களுக்கும் உதவித்தொகையை உடனடியாக தமிழக அரசு, தமிழ்நாடு கைத்தறித்துறையின் மூலம் தாமதமில்லாமல் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி