ஆப்நகரம்

சிறு, குறு தொழில்களை வளர்க்க உதவும் முதலீட்டாளர் மாநாடு

முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதனையடுத்து தற்போது இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாடு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் நடத்தப்பட உள்ளது.

Samayam Tamil 18 Jan 2019, 6:03 pm
முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதனையடுத்து தற்போது இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாடு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் நடத்தப்பட உள்ளது.
Samayam Tamil eps


இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாடு இன்னும் ஒரு வாரத்தில் சென்னை டிரேட் செண்டரில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விவாதிக்கும் கூட்டம் சட்டமன்றத்தில் நடைபெற்றது. எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்யவேண்டும் என இறுதி செய்ய இக்கூட்டம் நடைபெற்றது.

கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50,000 கோடி முதலீட்டு விண்ணப்பங்களை தமிழக அரசு ஏற்றது. 30 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் தமிழகத்தில் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனப்படுகிறது. இதுதவிர விரைவில் வரவுள்ள பட்ஜெட், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிவித்த முதல்வர், இதுவரை 329 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் கூறினார். இவற்றின் மூலமாக 15,000 பேருக்கு வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் பல வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய உதவும் எனப்படுகிறது.

சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ் திட்டம் வாயிலாக 46 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசாங்கத்தால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி