ஆப்நகரம்

ரூ.76.23 கோடியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்; அரசாணை வெளியீடு

கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என 110ஆவது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

Samayam Tamil 1 Nov 2019, 8:12 pm
சென்னை: அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.76.23 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil edappadi palanisamy


கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது 110ஆவது விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். இந்த திட்டத்தின்படி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு பயணம்: எந்த நாட்டுக்கு தெரியுமா?

ஒவ்வொரு கிராமத்திலும், கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு களம் அமைக்கும் பணிகள் ஊரகப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும் பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் பொது நிதியில் இருந்தும் மேற்கொள்ளப்படும். ஊராட்சி ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் பரிசுகள் வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

மேட்டூர் அணை உபரி நீரை சேகரிக்க புதிய திட்டம்! சேலத்தில் கலக்கும் எடப்பாடி

இந்நிலையில், அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.76.23 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 12,524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் வாங்க, விளையாட்டு போட்டிகள் நடத்த, விளம்பரம் செய்ய ரூ.38.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி