ஆப்நகரம்

ரூ.50 கோடிக்கு சொத்து: ஆர்டிஓ அதிகாரி கைது!

ஆந்திராவில் 50 கோடி ரூபாய் சொத்து சேர்த்த ஆர்டிஓ அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்

Samayam Tamil 12 Nov 2018, 6:38 pm
ஆந்திராவில் 50 கோடி ரூபாய் சொத்து சேர்த்த ஆர்டிஓ அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்
Samayam Tamil rto officer


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மோட்டார் வாகன உதவி ஆய்வாளாராக இருப்பவர் வெங்கட் ராவ். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வெங்கட்டின் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு, டிரைவர் வீடு ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த அதிரடி ரெய்டில், 3 கிலோ தங்க நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதையடுத்து தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஆர்டிஓ அதிகாரியின் உறவினர் மூலம் மெக்கானிக் ஸ்ரீனிவாச ராவ் என்பவரது வீட்டில் 2 சூட்கேஸ்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர், அவரது வீட்டுக்கு சென்று சூட்கேசை பறிமுதல் செய்து போலீசார் திறந்து பார்த்தனர். அப்போது அதில் 15 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துப்பத்திரம், 2.25 கிலோ தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், வருமானத்து அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆர்டிஓ அதிகாரி வெங்கட், அவருடைய டிரைவர், மெக்கானிக் ஸ்ரீனிவாச ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி