ஆப்நகரம்

சசிகலாவின் உறவினா் இளவரசி வீட்டில் 94 சவரன் நகைகள் திருட்டு

சசிகலாவின் உறவினா் இளவரசிக்கு சொந்தமான சென்னை வீட்டில் 94 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 19 Nov 2018, 9:28 am
சசிகலாவின் உறவினா் இளவரசிக்கு சொந்தமான வீட்டில் 94 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடா்பாக வடமாநில காவலாளி தேடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil Ilavarasi.


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும் அவரது உறவினா் இளவரசியும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனா். சிறையில் உள்ள இளவரசிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தை அடுத்த மகாலிங்கபுரத்தில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.

இளவரசி சிறையில் உள்ள நிலையில் அவரது வீட்டை அவரது மகனும், ஜெயா டீ.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான ஜெய்ஆனந்த் கவனித்து வருகிறாா். இந்நிலையில் ஜெய்ஆனந்த் குடும்பத்துடன் பெங்களூரு சென்றிருந்த நிலையில் வீட்டில் இருந்த 94 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திடீரென தலைமறைவான வடமாநில காவலாளியையும் காவல் துறையினா் தேடி வருகின்றனா். வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி