ஆப்நகரம்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு; பல கோடி மதிப்பில் தங்கம் பறிமுதல்!

விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்பிலான தங்கம் பிடிபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

TIMESOFINDIA.COM 11 Apr 2019, 4:53 pm
சென்னை விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒரு இடம். இந்நிலையில் இன்று காலை விமானத்தில் இருந்து வந்த பயணிகளை ஒவ்வொருவராக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
Samayam Tamil Gold Seized


அப்போது மூன்று பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இஸ்ரத்(24), சென்னையை சேர்ந்த முகமது சிரஜுதீன்(29) மற்றும் முழம்மில் ரிஸ்வான்(30) ஆகியோர் ஆவர்.

இவர்கள் முறையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ விமானத்தில் வந்து இறங்கினர். அவர்கள் மலவாய் பகுதியில் 909 கிராம் 24 கேரட் தங்கத்தை மறைத்து வைத்திருந்தனர்.

இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். நேற்று 7 வெவ்வேறு சம்பவங்களில் தங்கக் கடத்தல் கண்டறியப்பட்டது. ஏர் அரேபியா விமானத்தில் நைரோபியில் இருந்து ஷார்ஜா வழியாக சென்னை வந்த எத்தியோப்பியாவை சேர்ந்த முஹுபோ அதென் முகமது(56) சோதனை செய்தனர்.

அவரிடம் தங்கம் ஏதும் கொண்டு வருகிறீர்களா என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதற்றத்துடன் முரண்பாடான பதிலை தெரிவித்தார். அவரிடம் நடத்திய சோதனையில் ரூ.39.15 லட்சம் மதிப்பிலான 1.26 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதேபோல் மேலும் சில நபர்களிடம் இருந்து, ரூ.16 லட்சம் மதிப்பிலான 483 கிராம் தங்கம், ரூ.29 லட்சம் மதிப்பிலான 880 கிராம் 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அடுத்த செய்தி