ஆப்நகரம்

குண்டர் தடுப்பு சட்டத்தை உறுதி செய்த அறிவுரைக் கழகம்; பொள்ளாச்சி வழக்கில் அதிரடி!

பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Apr 2019, 6:28 pm
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூர சம்பவங்கள் வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil Pollachi Rape Case.


இதுகுறித்து இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, விவரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்த போலீசார், தடவியல் துறையிடம் ஆய்விற்காக ஒப்படைத்தனர். குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் பொள்ளாச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

ஒருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தால், அவர் சென்னையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் உறுப்பினர்களாக உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.

அவர்கள் வழக்கின் தன்மையைப் பொறுத்து, குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது சரியா என்று முடிவு செய்வர். இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரும் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதிபடுத்தியுள்ளது.

அடுத்த செய்தி