ஆப்நகரம்

பண்ருட்டி நகரசபை துணைத்தலைவர் கடத்தல் வழக்கு; 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

நகரசபை துணைத்தலைவர் கடத்திய வழக்கில் கைதுசெய்யப்பட்ட 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 6 Jun 2019, 8:18 pm
கடந்த மே 10ஆம் தேதி, காலை 7 மணிக்கு பண்ருட்டியைச் சேர்ந்தவர் மாயவேல்(48). இவர் காந்திரோடு ஸ்ரீ நடராஜ லஞ்ச் ஹோம் வாசல் அருகே அழகப்ப சமுத்திரம் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
Samayam Tamil Arrest


அவரிடம் இருந்து ரூபாய் 50,000 பணத்தை பறித்தது சம்மந்தமாக, பண்ருட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, பண்ருட்டி காவல் ஆய்வாளர் சண்முகம் புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்தார்.

அவர்கள்,

1) செல்வா வயது 25, S/o கண்ணன், No 102, வடக்கு தெரு, பெரிய காட்டுபாளையம்
2) சுபாஷ் (எ) ராஜி வயது 23, S/o ராஜாராமன், வடக்கு தெரு, பெரிய காட்டு பாளையம்
3) விஜி (எ) விஜயகுமார் வயது 26, S/o.செல்லப்பா, மேற்கு தெரு, பெரிய காட்டுசாகை
4) வாசு வயது 23, S/o இளங்கோ, No.306 தெற்கு தெரு, கீழிருப்பு

ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக குற்றவாளிகள் 2018ஆம் ஆண்டு பண்ருட்டி நகரசபை துணைத்தலைவர் விஜயரங்கன் என்பவரை கடத்தியது சம்பந்தமாக, அவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P. சரவணன் ஐபிஎஸ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஐஏஎஸ், ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார்.

அதன்பேரில் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் 4 குற்றவாளிகளும் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி