ஆப்நகரம்

தீபாவளிக்குமா வேலைக்கு வரணும்; அரசு ஊழியர்கள் அதிருப்தி

தீபாவளி விடுமுறை நாளில் வேலைக்கு வரச்சொல்லி அதிகாரி கடிதம் எழுதியுள்ள சம்பவம், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 15 Oct 2017, 10:07 am
தீபாவளி விடுமுறை நாளில் வேலைக்கு வரச்சொல்லி அதிகாரி கடிதம் எழுதியுள்ள சம்பவம், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil goverment staff should come duty on diwali
தீபாவளிக்குமா வேலைக்கு வரணும்; அரசு ஊழியர்கள் அதிருப்தி



சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடந்த செப்டம்பர் மாதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதற்கு பதிலாக வாரவிடுமுறை நாட்களில் பணிசெய்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வி துறை ஊழியர் ஒருவருக்கு, தீபாவளி அன்று பணிக்கு வருமாறு அவருடைய அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

வாரவிடுமுறை நாட்களைத் தவிர தீபாவளியன்றும் பணிக்கு வரவேண்டும் என்று அதிகாரி கடிதம் எழுதியுள்ள இந்த சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி