ஆப்நகரம்

சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் இயங்க அனுமதி..!

சென்னையில் கட்டுப்பாடு மண்டலங்களை தவிர மற்ற பகுதிகளில் 10 சதவீத பணியாளர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் இயங்கலாம் என அறிவிப்பு...

Samayam Tamil 9 Jul 2020, 6:36 pm
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தளர்வுகளை கொண்டு வந்த அரசு, சென்னை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்துக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என தெரிவித்தது.
Samayam Tamil ஐ.டி. நிறுவனங்கள்


ஆனாலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் பழைய விதிமுறைகள் அமலில் இருக்கும் என விளக்கியது. இந்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 10 சதவீத ஊழியர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

13 பேரை பலி கொண்ட என்.எல்.சி விபத்து..! 5 கோடி அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு...

அதன்படி, கட்டுப்பாடு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் எனவும் நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே சென்று பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி