ஆப்நகரம்

சென்னை: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து; நடத்துநர் பலி, 15 பேர் காயம்!

சென்னை பாடி மேம்பாலம் அருகே நள்ளிரவு கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் நடத்துனர் பலியானார், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

Samayam Tamil 2 Nov 2019, 11:14 am
ஆந்திரா மாவட்டம் நெல்லூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி பயணிகளை ஏற்றிவந்த அரசு பேருந்து நள்ளிரவு 2.50 மணியளவில் பாடி மேம்பாலம் தாதாங்குப்பம் அருகே வந்த பொழுது முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடத்துநர் வீரமுத்து உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
Samayam Tamil Untitled collage (6)


துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து, வீடியோ உள்ளே!

நடத்துநர் வீரமுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 3 பேர் உள்ளிட்ட 15 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் கோவிந்தசாமி தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டியதே காரணம் என தெரியவந்தது.

கடலூர்: கடலையை மிதித்ததால் மாடியிலிருந்து குழந்தையை தள்ளிவிட்டு கொலை!

இந்த விபத்தில் உயரிழந்த வீரமுத்து ரெட்ஹில்ஸ் பாடியநல்லூரைச் சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி தீபன் என்ற ஒருமகன் உள்ளார். பொறியியல் படித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் பணிப்புரிந்து வருகிறார். ஓட்டுநர் கோவிந்த சாமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதே போல ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவரும் முகத்தில் காயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் பேருந்தில் பயணம் செய்த ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன், ஹரி, வெங்கடேஷ்வராலூ, ஜானி, வர்கீஸ், ரெட்டி, சுரேஷ், டேவிட் உள்ளிட்ட 12 பேர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்த செய்தி