ஆப்நகரம்

காந்தி ஜெயந்தியன்று மது கடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது!

அரசு பேருந்தில் மது பாட்டில்களை கடத்தி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 2 Oct 2018, 12:23 pm
காந்தி ஜெயந்தின்று, விற்பனை செய்வதற்காக அரசு பேருந்தில் மது பாட்டில்களை கடத்தி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil காந்தி ஜெயந்தியன்று மது கடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது!
காந்தி ஜெயந்தியன்று மது கடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது!


காந்தியின் பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் மது விலக்கு அமலில் உள்ளது. மீறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காரைக்காலில் அரசு பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் - முதுகுளத்தூர் அரசு பேருந்தில் காந்தி ஜெயந்தின்று, விற்பனை செய்வதற்காக மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலிசார், கடத்தலில் ஈடுபட்டதாக அரசு பேருந்தின் நடத்துனர் கோவிந்தராஜ் மற்றும் ஓட்டுனர் சல்மான்கான் ஆகியோரை கைது செய்தனர்.

அடுத்த செய்தி