ஆப்நகரம்

எதுக்கு என்னை வெளியே தூக்கிட்டு போறீங்க- தேனி அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு இப்படியொரு அதிர்ச்சி!

அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம் செய்யப்பட்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 29 Jul 2019, 12:42 pm
தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கம்பம் டூ திண்டுக்கல் வழித்தடத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கம்பம் பணிமனைக்கு வேலைக்கு சென்றார்.
Samayam Tamil THeni Bus


அங்கிருந்த பேருந்தை எடுத்து இயக்கத் தொடங்கினார். இந்நிலையில் அவரை சுற்றி வளைத்த போலீசார், பேருந்தை எடுக்க விடாமல் தடுத்தனர். பின்னர் பாலகிருஷ்ணனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தனர்.

மேயர் கொலை வழக்கு: குற்றவாளிகளை நெருங்கிய காவல் துறை: கார் பறிமுதல்

இந்த சம்பவத்தால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், நான் கம்பம் டூ திண்டுக்கல் வழித்தடத்தில் ஓட்டுநராக செயல்பட்டு வருகிறேன்.

ஒரு டியூட்டிக்கு 8 மணி நேரம் என்று நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால் திண்டுக்கல் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால், கூடுதல் நேரம் ஆகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி, விபத்து ஏற்படாத வண்ணம் பேருந்தை மெதுவாக இயக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

ஏமாற்றம் தரும் தென்மேற்குப் பருவமழை; அரசும், மக்களும் செய்ய வேண்டியது என்ன?

இதனால் 9 மணி நேரம் எடுக்கிறது. இதையொட்டி அந்த ஒரு மணி நேரத்திற்கு ஊதியம் வேண்டும் என்று கடிதம் எழுதினேன். இதன் காரணமாக என்னை இடைநீக்கம் செய்துவிட்டதாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த கம்பம் பணிமனை அதிகாரிகள், பாலகிருஷ்ணன் மேலிடத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் காரணமாக மேலிடத்தில் இருந்து இடைநீக்க உத்தரவு வந்ததாக கூறுகின்றனர்.

Chennai Rains: சில்லென்று வாரி வழங்கப் போகும் பருவ மழை- தமிழ்நாடு லேட்டஸ்ட் வானிலை நிலவரம்!

அடுத்த செய்தி