தஞ்சை : அரசுப்பேருந்தும், மினி லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து கும்பகோணம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரியும் தஞ்சை அருகே உள்ள வல்லம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் மினி லாரி ஓட்டுநர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 25 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த பயணிகள் அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து எவ்வாறு என்று விசாரணை நடத்திவருகின்றனர்.
திருப்பூரில் இருந்து கும்பகோணம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரியும் தஞ்சை அருகே உள்ள வல்லம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் மினி லாரி ஓட்டுநர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 25 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த பயணிகள் அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து எவ்வாறு என்று விசாரணை நடத்திவருகின்றனர்.