ஆப்நகரம்

Doctors Boycott: மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு செய்வதை தவிர்க்க வேண்டும்: விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: போராட்டம் நடத்தும் தமிழக அரசு மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samayam Tamil 5 Dec 2018, 8:48 am
தமிழக அரசு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தவிரிக்க வேண்டும் என சுகாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அனைத்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்றையை போராட்டத்தை தொடர்ந்து, வரும் 9 மற்றும் 13ம் தேதிகளிலும் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தை தமிழக அரசு மருத்துவர்கள் முன்னெடுக்கும் முடிவில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழக சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசின் முழு கவனமும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளதால, அரசுக்கு மருத்துவர்கள் துணை நிற்க வேண்டும் என்று கூறினார்.

அரசு மருத்துவர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் அவர்கள் பணி புறக்கணிப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி