ஆப்நகரம்

எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை: உளறிக்கொட்டிய ஓட்டைவாய் அமைச்சர்

தற்போது இருக்கும் தமிழக அரசுக்கு பெரும்பான்மையை இல்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறிக்கொட்டினார்.

TNN 15 Aug 2017, 5:22 pm
தற்போது இருக்கும் தமிழக அரசுக்கு பெரும்பான்மையை இல்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறிக்கொட்டினார்.
Samayam Tamil government does not have majority says dindigul srinivasan
எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை: உளறிக்கொட்டிய ஓட்டைவாய் அமைச்சர்


சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. ஆனால், 115 பேர் தான் இப்போது இருக்கிறார்கள். ஈபிஎஸ், ஓ.பி.எஸ். அணிகளில் உள்ள எம்எல்ஏக்களைச் சேர்த்த பிறகும் 115 பேர் மட்டுமே ஆட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பெரும்பான்மைக்கு இன்னும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் வேண்டும். இதனால், இப்போது நடக்கும் அரசுக்கு பெரும்பான்மையே இல்லை" என்று கூறியுள்ளார்.

"சின்னம்மா என்று அழைக்கப்பட்டவர் இப்போது சசிகலா என்று பெயர் சொல்லி அழைக்கும் நிலைக்கு வந்துவிட்டார்." என்றும் அமைச்சர் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி