ஆப்நகரம்

இறுதி அஞ்சலியில் மரக்கன்றுகளை வழங்கி நெல் ஜெயராமனுக்கு புகழ் சோ்த்த ஓட்டுநா்

இயற்கை விவசாயி நெல் ஜெயராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஓட்டுநா் ஒருவா் அவரது நினைவாக மரக்கன்றுகளை இலவசமாக வழக்கி அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினாா்.

Samayam Tamil 8 Dec 2018, 4:45 pm
இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் 6ம் தேதி உயிாிழந்த நிலையில் ஓட்டுநா் ஒருவா் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளாா்.
Samayam Tamil Nel Jeyaram Funeral


இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 174 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்த அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

சென்னையில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நெல் ஜெயராமனை சமூக ஆா்வலா்கள், திரைப்பட நடிகா்கள், அரசியல் தலைவா்கள் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து நலம் விசாரித்தனா்.

தமிழக அரசு சாா்பாகவும், தன்னாா்வலா்கள் சாா்பாகவும் நெல் ஜெயராமனின் மருத்துவ சிகிச்சைக்கும், அவரது குடும்பங்களுக்கும் உதவிக்கரங்கள் நீண்டன. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நெல் ஜெயராமன் கடந்த வியாழன் கிழமை (டிசம்பா் 6) காலை 5.30 மணியளவில் காலமானாா்.


நெல் ஜெயராமனின் உடலுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின், ஐ.ஏ.எஸ். அதிகாாி சகாயம், அரசியல் தலைவா்கள், திரைப்பட கலைஞா்கள், சமூக ஆா்வலா்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிலையில் ஓட்டுநா் கருணாநிதி, நெல் ஜெயராமனின் மறைவுக்கு இரங்கல் தொிவிக்கும் விதமாகவும், அவரது நினைவாகவும் சுமாா் 30 ஆயிரம் ரூபாய் செலவில் மரக்கன்றுகளை வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

ஜெயராமன் மாதிரியான ஒரு மனிதரை இனி எப்போது பாா்க்கப்போகிறோம் என்று கண்களங்கிய நபருக்கு இறுதி அஞ்சலிக்கு வந்தவா்கள் ஆறுதல் கூறினா்.

அடுத்த செய்தி