ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒரு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு வரும் ஏப் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Apr 2019, 2:15 pm
தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒரு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் அளித்த மனுவில் : "தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் செயல்பட்ட போது பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்களின் விதிமுறைகள் மீறி செயல்பட்டுள்ளது.
Samayam Tamil ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


குறிப்பாக நீர் மாசுபடுதல் தடுப்பு சட்ட பிரிவு 1974, காற்று மாசுபடுத்தல் தடுப்பு சட்ட பிரிவு 1981, சுற்றுச்சூழல் மாசு தடுப்பு சட்ட பிரிவு 1986, ஆகிய பிரிவுகளின் விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. இவர் விதிமுறைகளை மீறி செயல் பட்டதை அரசு தரப்பில் முந்தைய வழக்குகளில் மாநில அரசு ஒப்பு கொண்டுள்ளது. ஆனால் சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்ட வேதாந்தா நிறுவன ஸ்டெர்லைட் ஆலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் இதுவரையில் மத்திய மாநில அரசுகள் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே நீதிமன்றம் தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்விற்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் வேதாந்தா நிறுவனத்தை தானாக முன் வந்து எதிர் மனு தார்ராக சேர்த்த நீதிபதிகள், வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 15க்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி