ஆப்நகரம்

பள்ளிகள் காசு வாங்காம டிசி கொடுக்கணும்- அரசு உத்தரவு!

தனியார்ப் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டண வசூலில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், அதிரடி உத்தரவு வெளியாகியுள்ளது...

Samayam Tamil 19 Aug 2020, 3:47 pm
மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பள்ளியிலிருந்து விடை பெற்று, மாற்றுச் சான்றிதழ் கேட்டால், அவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil பள்ளிகள் காசு வாங்காம டிசி கொடுக்கணும்- அரசு உத்தரவு!
பள்ளிகள் காசு வாங்காம டிசி கொடுக்கணும்- அரசு உத்தரவு!


மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள், கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த வருட இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரகம் இப்படி ஒரு அதிரடி உத்தரவைப் பிறபித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சிறு தொழில், தினசரி வருமானம் ஈட்டி வந்தோரின் நிலை அடியோடு சாய்ந்தது.

இதன் காரணமாக பல குடும்பங்கள் உணவின்றி சிரமப்பட்டன. இதற்கிடையே மாணவர்களின் பள்ளி கட்டணத்தையும் கட்ட முடியாமல் பல தவித்து வருகின்றனர்.

பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, 2020-21 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர பள்ளிகள் 75 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம். ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 40 சதவீத கட்டணத்தை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம்.

அனிதா, ரித்து வரிசையில் சுபஸ்ரீ... நீட் தேர்வால் கோவை மாணவி தற்கொலை

இந்த தீர்ப்பு மாணவர்களின் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வருமானமே இல்லாத சூழலில், எப்படி பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை செலுத்துவது பல குடும்பங்கள் வேதனையடைந்தன.

இதற்கிடையே மெட்ரிகுலேஷன் பள்ளியிகளில் மாற்று சான்றிதழ் கேட்போரிடம் பள்ளி நிர்வாகம் பள்ளி கட்டணம் கேட்பதாகவும், குறிப்பிட்ட தொகையை செலுத்தினால்தான் மாற்று சான்றிதழ் விநியோகிக்கப்படும் என மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி மாறுதல் மீண்டும் அதே பள்ளியில் சேருவதற்கு, உள்ளிட்ட வழிமுறைகளின்போது மாற்று சான்றிதழ் வழங்கப்படும். இந்நிலையில், பள்ளிகளில் வழங்கப்படும் மாற்று சான்றிதழ்களுக்கு எந்தவிதமாக கட்டணமும் வசுலிக்கக் கூடாது என மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் அதிரடி உத்தரவு ஒன்றை இப்போது பிறபித்துள்ளது.

அடுத்த செய்தி