ஆப்நகரம்

மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி தலைமை ஆசிரியர் பலி

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 18 Jul 2019, 2:39 pm
அவினாசி அருகே வீட்டு மாடியில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாதன் கால் தவறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Samayam Tamil Crime 1.


திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (50). இவர் வடுகபாளையம் சமத்துவபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விசாலாட்சி அவிநாசியை அடுத்து ஆலத்தூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.மகன் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

லோகநாதன் தனது வீட்டின் அருகிலேயே புதிதாக வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.இந்நிலையில் இன்று காலை வாடகைக்கு விட்ட குடியிருப்பு வீட்டின் மாடியில் குழாய் அடைத்திருப்பதை சுத்தம் செய்து முதல் மாடியிலிருந்து குப்பையை கீழே கொட்ட முயற்சித்துள்ளார். அப்போது நிலை தடுமாரி முதல் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் லோகநாதன் உயிரிழந்தார். இதையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரது உடலை மீட்டனர். அவிநாசி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து லோகநாதன் உடலை பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லோகநாதன் மாடியிலிருந்து விழுந்து பலியான சம்பவம் மற்றும் அவரது உடலை அக்கம் பக்கத்தினர் மீட்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. மாடியிலிருந்து தவறி விழுந்து அரசு பள்ளி தலைமையாசிரியர் உயிரிழந்த சம்பவம் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி