ஆப்நகரம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்கும் முதியோர் இல்ல அம்மாக்கள்!

கோவையில் இயங்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்கள் உணவு சமைத்து வழங்கும் நெகிழ்ச்சியான சமப்வம் நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 17 Jul 2018, 3:00 pm

கோவையில் இயங்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்கள் உணவு சமைத்து வழங்கும் நெகிழ்ச்சியான சமப்வம் நடைபெற்று வருகிறது.

கோவையில் உள்ள ஆர். எஸ். புரத்தில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதற்கு அருகில் ஈர நெஞ்சம் என்ற ஆதரவற்றோர் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த ஆதரவற்றோர் அறக்கட்டளையை மகேந்திரன் நடத்துகிறார். பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள்,ஏழைகள்,மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காகவே இந்த அறக்கட்டளை இயங்கி வருகிறது. தாமாக முன்வந்து இதற்கு உதவி செய்யும் சில நல்ல உள்ளங்களால் இந்த அறக்கட்டளை இயங்கி வருவதாக மகேந்திரன் கூறுகிறார்.
Samayam Tamil cats


இந்நிலையில் அருகில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் மகேந்திரனுக்குதொடர்பு கொண்டு, மாணவர்களின் காலை உணவுக்கு ஏதேனும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டுள்ளனர்.இதை பற்றி மற்றவர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று மகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதியவர்களிடம் கூறியபோது தாங்களே சமைத்து தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்றுமுதல் முதியவர் இல்லத்திற்கு வரும் பொருட்களை வைத்துதாங்களும் உண்டு, அதை அந்த குழந்தைகளுக்கும்கொடுத்துவருகின்றனர் அங்கிருக்கும் தாய்மார்கள். தினமும் காலையில் உணவு சமைத்து பள்ளிக்கு வந்து தருகிறார்கள் . வரிசையில் நின்று எல்லா குழந்தைகளும்உணவு வாங்குகின்றனர்.

இது தொடர்பாகஈர நெஞ்சம் அறக்கட்டளை சேர்ந்த சகுந்தலா கூறியதாவது ‘ நானும் என் கணவரும் கூலி வேலை செய்து பிள்ளைகளை வளர்த்தோம். நன்றாக படிக்க வைத்தோம். ஆனால் திருமணம் ஆனதும் எனக்கும் மருமகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் நான் இங்கே வந்துவிட்டேன். பிள்ளைகள் கைவிட்டால் என்ன. இப்போது எனக்கு நிறைய பேரப் பிள்ளைகள் இருக்கிறது. நாங்கள் சந்தோஷமாக சமைத்த உணவைஅவர்கள் சாப்பிடும்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

அடுத்த செய்தி