ஆப்நகரம்

ஒரு ஏக்கர் நிலத்தில் உயிரூட்டும் காய்கறிகள், குமரி அரசு ஆசிரியர் அசத்தல்!

குமரி அருகே கொரோனா காலகட்டத்தை சாதகமாக பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து சாதித்து வருகிறார் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்.

Samayam Tamil 5 Sep 2020, 4:57 pm
கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் வேலையிழந்து வருமானமின்றி இன்னல்களுக்கு ஆளாகி வரும் நிலையில் பலர் ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றி இயற்கை விவசாயம் கலை பொருட்கள் செய்வது என பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் அருகே ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த ஜான் ஸ்டீபன் என்ற அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வருமானம் ஈட்டி சாதித்து வருகிறார்.
Samayam Tamil ஜான் ஸ்டீபன்


ஏற்கனவே இயற்கை வேளான்மையில் ஆர்வம் உடைய இவர் கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்பே வீட்டிற்கு தேவையான காய்கறிகளை தனது தோட்டத்திலேயே இயற்கை வேளான் முறையில் விளைவித்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அதை விரிவுபடுத்தியுள்ளார்.

1 ஏக்கர் பரப்பளவில் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி முழுக்க முழுக்க மண்புழு உரம் சாணம் என இயற்கை உரங்களை பயன்படுத்தியும் பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மஞ்சள், வசம்பு, இஞ்சி போன்ற பொருட்களை பூச்சி கொல்லியாக பயன்படுத்தி பாகற்காய், புடலை, பச்சைமிளகாய், குடை மிளகாய், பூசணிக்காய், தக்காளி, வெண்டை, வெள்ளரி பயறு, சிறு கிழங்கு, அவரை என அனைத்து விதமான காய்கறிகளையும் விளைவித்து விற்பனை செய்து வருவதோடு ஒருங்கிணைந்த பண்ணையாக நாட்டுக்கோழி வளர்ப்பு மீன் வளர்பிலும் ஈடுபட்டு வருகிறார்.


இயற்கையான முறையில் தான் விளைவிற்கும் காய்கறிகளை வாங்க வெளியூர்களிலிருந்தும் வரும் பொதுமக்கள் அவர்களுக்கும் வீட்டிற்கு தேவையான அனைத்து காய்கறிகளையும், ஒரு வாரம் பயன்படுத்தும் வகையில் வாங்கி செல்கின்றனர்.

இயற்கை விவசாயத்தை குறித்து கூறும் ஜான் ஸ்டீபன், அழிந்து வரும் நாட்டு மாம்பழ மரங்களை மீட்டெடுக்கும் வகையில் அரிய வகை மாங்கன்றுகளை பராமரித்து வருவதாகவும், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பலர் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வந்த நிலையில் தனக்கு இயற்கை விவசாயம் நல்ல வருமானத்தை ஈட்டி தந்துள்ளதாகவும் கூறினார்.

அடுத்த செய்தி