ஆப்நகரம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சி வழங்கி முன் மாதிரி பள்ளிகளாக மாற்றுவேன் என சட்ட மன்ற உறுப்பினர் பரந்தாமன் கூறியுள்ளார்.

Samayam Tamil 4 Aug 2021, 1:57 pm
எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று 12ஆம் வகுப்பில் உயர்மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டி ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் பள்ளி மாணவிகளின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் பயிற்சி தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள பி.டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.
Samayam Tamil tn school students


இவ்விழாவில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.
அறிவாலயத்தில் கிண்டும் அல்வா: யாருக்குன்னு இப்போ சொல்ல முடியாதாம்!
“அண்ணா முதல்வராக இருந்த போதும் கலைஞர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்திலும், மு.க.ஸ்டாலின் அவருடைய ஆட்சியிலும் பெண்களுக்கான முன்னேற்றத் திட்டங்களை கொண்டு வரக்கூடிய ஒரு அரசும் ஆட்சியும் திமுக மட்டும்தான். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை கொண்டு வந்த ஆட்சியும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி தான்” என்று இ.பரந்தாமன் கூட்டத்தில் பேசினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் +2 பயின்று முதல் மதிப்பெண் எடுத்த 20 மாணவிகளுக்கு இன்று உதவி தொகை வழங்கப்பட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு உதவி வழங்கப்படும் என்றார்.

மேலும் இந்த மாணவிகள் போட்டி தேர்வுகளில் பங்கேற்க விரும்பினால் அதற்கான பயிற்சிகளும் வழங்கப்படும் என்றார். தனியார் அமைப்பு மூலம் மாணவிகளுக்கு ஆங்கில திறன் மேம்பாடு பயிற்சி வழங்க உள்ளதாகவும் அப்போது தெரிவித்தார்.
தமிழகத்தில் தலைகாட்டும் கொரோனா: கடைகள் திறக்க கட்டுப்பாடு!எழும்பூர் சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றவர் , ஆங்கில மொழித்திறன் மேம்பாடு மற்றும் பெண்களுக்கான திறன் மேம்பாடு ஆகியவற்றிக்கான பயிற்சி எழும்பூரில் உள்ள அனைத்து அரசு பள்ளியிலும் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு விளையாட்டு துறையில் சாதிக்கும் வகையில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.

அடுத்த செய்தி