ஆப்நகரம்

ஆளுநரின் காரை மறித்து பொதுமக்கள் சாலை மறியல் !

கஜாபுயல் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வரும் ஆளிநரின் காரை மறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 22 Nov 2018, 4:05 pm
கஜாபுயல் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வரும் ஆளிநரின் காரை மறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Samayam Tamil abibi


நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, தாதன்திருவாசல், கோவில்பத்து, வானவன் மகாதேவி, கள்ளிமேடு, தாமரைப்புலம், செம்போடை வடக்கு, தேத்தாக்குடி தெற்கு ஆகிய பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று பார்வையிட்டார்.

மேலும் முகாம்களில் சமைக்கப்படும் உணவின்தரத்தை சோதனை செய்தார். இந்நிலையில் இன்று திருவாரூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட பின் மேட்டுபாளையத்திற்கு செல்லும் போது ஆளுநர் காரை மறித்து பொதுமக்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு இதுவரை அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என்றும் முகாமில் வழங்கப்படும் உணவு சரியாக இல்லை எனவும் கோஷமிட்டனர். காரில் இருந்து ஆளுநர் இறங்கி அவர்களின் கோரிக்கைகளை கேட்டபின்பு அவர்கள் கலைந்துசென்றனர்.

அடுத்த செய்தி