ஆப்நகரம்

ஆளுநர் வருகையால் சூடான தமிழக அரசியல் களம்; மெஜாரிட்டியை நிரூபிப்பாரா எடப்பாடி?

பரபரப்பான அரசியல் சூழலில், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை தமிழகம் வருகிறார்.

TNN 17 Sep 2017, 7:13 pm
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை தமிழகம் வருகிறார்.
Samayam Tamil governor comes tomorrow to tamilnadu
ஆளுநர் வருகையால் சூடான தமிழக அரசியல் களம்; மெஜாரிட்டியை நிரூபிப்பாரா எடப்பாடி?


ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு, டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின் ஆட்டம் தொடங்கியது.

முதலமைச்சர் ஈபிஎஸை நீக்கவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். பொறுத்து, பொறுத்து பார்த்ததில் ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மீண்டும் மும்பைக்கே கிளம்பினார்.

இதற்கிடையில் ஈபிஎஸ் தலைமையிலான அரசை, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றம் வரை வரிந்து கட்டிக் கொண்டு சென்றனர்.

இதில் டிடிவி தரப்பும், திமுக தரப்பும் ஒரே நோக்கில் நிற்பது, நீதிமன்றத்தில் தெரியவந்தது. டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதையடுத்து வரும் 20ஆம் தேதி வரை, டிடிவி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த சூழலில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை தமிழகம் வருகை புரிய உள்ளார்.

Governor comes tomorrow to Tamilnadu.

அடுத்த செய்தி