சென்னை: ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து தவறாக சொல்ல வேண்டாம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவையில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆய்வு செய்தால் தானே பாராட்ட முடியும் என்று விளக்கமளித்தார்.
இதற்கு பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஆளும்கட்சியினர் கவலைப்பட ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர். இந்தப் பட்டியலில் தற்போது அமைச்சர் உதயகுமாரும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டத்தைக் கரைத்துக் குடித்தவர் என்றார்.
மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை தமிழகத்தில் ஏற்படாது என்றும், கச்சத்தீவை தி.மு.க தாரை வார்த்ததைப் போல மாநில சுயாட்சியைத் தாரை வார்த்துத் தர மாட்டோம் என்றும் உதயகுமார் கூறினார்.
Governor learnt law in detail says Minister Udhayakumar.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவையில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆய்வு செய்தால் தானே பாராட்ட முடியும் என்று விளக்கமளித்தார்.
இதற்கு பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஆளும்கட்சியினர் கவலைப்பட ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர். இந்தப் பட்டியலில் தற்போது அமைச்சர் உதயகுமாரும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டத்தைக் கரைத்துக் குடித்தவர் என்றார்.
மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை தமிழகத்தில் ஏற்படாது என்றும், கச்சத்தீவை தி.மு.க தாரை வார்த்ததைப் போல மாநில சுயாட்சியைத் தாரை வார்த்துத் தர மாட்டோம் என்றும் உதயகுமார் கூறினார்.
Governor learnt law in detail says Minister Udhayakumar.