ஆப்நகரம்

ஆளுநருக்கு சுப்ரமணியன் சுவாமி கண்டனம்

தமிழகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில் ஆளுநர் மும்பையில் அமர்ந்து இருக்கிறார் என்று சுப்ரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 8 Feb 2017, 10:03 am
தமிழகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில் ஆளுநர் மும்பையில் அமர்ந்து இருக்கிறார் என்று சுப்ரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil governor sitting in maharashtra when political crisis in tn bjp mp subramanian swamy
ஆளுநருக்கு சுப்ரமணியன் சுவாமி கண்டனம்


இதுகுறித்து பாஜக மாநிலங்களவை எம்.பி., சுப்ரமணியன் சுவாமி கூறியிருப்பதாவது:

தமிழத்தில் அசாதாரண அரசியல் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் என்ன செய்து கொண்டு இருக்கிறார். இரண்டு மாநிலங்களையும் அவரால் கவனித்துக் கொள்ள முடியவில்லை என்றால் அதுகுறித்து அவர் தனது கருத்தை வெளியிட வேண்டும். சட்டப்பேரவையின் அதிமுக குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு முதல்வராக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். சசிகலாவுக்காக ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஓபிஎஸ் ரப்பர் ஸ்டாம்ப் ஆகத்தான் இருந்தார்.

இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Governor sitting in Maharashtra when political crisis in TN: BJP MP Subramanian swamy

அடுத்த செய்தி