ஆப்நகரம்

சட்டசபையில் தமிழக அரசை பாரட்டிய கவர்னர்

சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி பெருமையுடன் பேசினார்.

Samayam Tamil 8 Jan 2018, 10:35 am
சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி பெருமையுடன் பேசினார்.
Samayam Tamil governor speech in tn assembly 2018
சட்டசபையில் தமிழக அரசை பாரட்டிய கவர்னர்


இந்தாண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கியது. அவை வழக்கப்படி முதலில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை பேசினார். ஆங்கிலத்தில் தனது உரையை படித்த கவர்னர் தமிழக அரசின் செயல்பாடுகளை புகழ்ந்து பேசினார்.

மின்பற்றாக்குறையாக இருந்த மாநிலத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது முயற்சியால் மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளார், அவர் வகுத்து உள்ள பாதையை தற்போதைய தமிழக அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், இந்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது என்றும் பேசினார்.


மேலும், காவிரி வாரியம் மேலாண்மை அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது என்றும்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கக் கேட்டுக் கொள்வதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் மீதமுள்ள மெட்ரோ திட்ட பணிகள் முடிக்கப்படும் என்றும் கூறிய கவர்னர், இளைஞர்களுக்கு வேலைவாய்பு அளிக்க பல்வேறு பயிறசிகள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி