தொடர் மழை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் காரணமாக மக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அரசுத் தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார். இதனால் 2015 போன்ற சூழல் ஏற்பட்டாலும் கூட அரசு எப்படியும் அதை சமாளித்து விடும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது.
மேலும் என் தொடர்புடையவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி வேண்டியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். இந்த சூழ்நிலையில் மக்கள் தொண்டாற்றும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள் என்று கூறியுள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஏற்கனவே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.