ஆப்நகரம்

குடியரசு தலைவரிடம் அட்வைஸ் கேட்கச் சென்றார் ஆளுநர்!

சபாநாயகரின் தகுதி நீக்க முடிவால், தமிழக அரசியலில் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தின் அரசியல் நிலவரம் பற்றி குடியரசுத் தலைவரிடம் ஆலோசிக்க டெல்லி சென்றுள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

TNN 18 Sep 2017, 4:35 pm
டெல்லி: சபாநாயகரின் தகுதி நீக்க முடிவால், தமிழக அரசியலில் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தின் அரசியல் நிலவரம் பற்றி குடியரசுத் தலைவரிடம் ஆலோசிக்க டெல்லி சென்றுள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
Samayam Tamil governor vidyasagar rao has planned to meet the president regarding the political situations in tamilnadu
குடியரசு தலைவரிடம் அட்வைஸ் கேட்கச் சென்றார் ஆளுநர்!


சபாநாயகர் தனபால் இன்று காலை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து உள்துறை ராஜ்நாத் சிங்கிடம் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணியளவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே பீகார் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Governor Vidyasagar Rao has planned to meet the president regarding the political situations in Tamilnadu.

அடுத்த செய்தி