ஆப்நகரம்

108 கோடி செலவில் திருநெல்வேலியில் விளையாட்டு கிராமம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் 108 கோடி செலவில் விளையாட்டு கிராமம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Samayam Tamil 2 Aug 2018, 5:18 pm
திருநெல்வேலி மாவட்டத்தில் 108 கோடி செலவில் விளையாட்டு கிராமம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
Samayam Tamil 45331-msu


திருநெல்வேலி மாவட்டத்தில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 175 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு கிராமம் ஒன்றை 108 கோடி செலவில் உருவாக்கஅரசு நிதி ஒதுக்கியுள்ளது.

மேலும் இங்கு நீச்சல் குளத்தைதமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டவுள்ளது. இதற்கான அடிக்கல்லை நேற்றுஅமைச்சர் கே.பி.அன்பழகன் நாட்டினார். உலகத்தரத்திலான இந்த நீச்சல்குளம்5 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. மேலும் இந்த நீச்சல் குளமானது ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்படும். தமிழகத்தில்,சென்னையில் தான் உலகத் தரம் வாய்ந்த நீச்சல் குளம் அமைந்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இங்கேதான் அடுத்த நீச்சல் குளம் கட்டப்பட உள்ளது.

உயர்கல்விக்கான மொத்த பதிவு விகிதத்தில் தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக அமைச்சர்கே. பி அன்பழகன் விழாவின்போதுகூறினார். 2017-18இல் உயர்கல்வியில் சேர்ந்தவர்களின் மொத்த பதிவு விகதம் தேசிய அளவில் 25.8% ஆகவும் தமிழகத்தில் 48.6 ஆகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி