ஆப்நகரம்

ரிசர்வ் வங்கியின் இயக்குநராக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்!!

ரிசர்வ் வங்கியின் செயல் சாரா இயக்குநராக துக்ளக் இதழின் ஆசிரியராக இருக்கும் ஆடிட்டர் சுவாமிநாதன் குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 9 Aug 2018, 12:27 pm
ரிசர்வ் வங்கியின் செயல் சாரா இயக்குநராக துக்ளக் இதழின் ஆசிரியராக இருக்கும் ஆடிட்டர் சுவாமிநாதன் குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil ரிசர்வ் வங்கியின் இயக்குநராக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்!!
ரிசர்வ் வங்கியின் இயக்குநராக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்!!


துக்ளக் இதழின் ஆசிரியராக இருப்பவர் ஆடிட்டர் குருமூர்த்தி. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருக்கும் இவரின் கருத்துகள், பொதுமக்கள் மத்தியில் பெரும்பாலும் எதிர்ப்பையே சம்பாதித்துள்ளன.

இந்நிலையில், இவரை ரிசர்வ வங்கியின் இயக்குநர் குழுவில், செயல் சாரா இயக்குநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொழிலதிபர் சதிஷ் காஷிநாத் மராத்தேவ்வும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் இயக்குநராக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்!!


இதையடுத்து ஆடிட்டர் குருமூர்த்தி தனது நியமனம் குறித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ ஆர்பிஐயில் நான் இயக்குநராக நியமிக்கப்பட்டது தொடர்பான பின்னணி. சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதால், இதுவரையில் தனியார் அல்லது பொது நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்தது இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக, முதல்முறையாக இயக்குநராக பொறுப்பெற்றுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி