ஆப்நகரம்

காட்டுத்தீ விபத்து; விசாரணை அதிகாரி நியமனம்

குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரிப்பதற்காக அதுல்யா மிஸ்ரா ஐஏஎஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 14 Mar 2018, 4:23 pm
குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரிப்பதற்காக அதுல்யா மிஸ்ரா ஐஏஎஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil govt appoints senior bureaucrat atulsa misra ias to probe on the incidence of kurangani forest fire
காட்டுத்தீ விபத்து; விசாரணை அதிகாரி நியமனம்


தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலையில், மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற போது காட்டுத் தீயில் சிக்கி 11 பேர் உயிரழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை ட்ரரெக்கிங் கிளப் என்ற அமைப்பு தான் இந்த மலையேற்றப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும், இதுவே விபத்தில் மாணவிகள் பலியானத்திற்கு காரணம் என்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். ஆனால், வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே மலையேற்றப் பயிற்சிக்கு சென்றதாக சென்னை ட்ரெக்கிங் கிளப் விளக்கமளித்தது. இதனால் இந்த தீ விபத்து சம்பவத்தில் வனத்துறை உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில், தேனி குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த, அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ் தலைமையில் தனியாக விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விபத்து விசாரணை அறிக்கையை 2 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வருவாய் துறை மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை முதன்மை செயலராக அதுல்ய மிஸ்ரா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி