ஆப்நகரம்

அரசு பேருந்து ஓட்டுநருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

மருத்துவ படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவருக்கு ரூ.10 லட்சம் அபராதம்.

Samayam Tamil 3 Aug 2016, 6:27 pm
மதுரை: மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் அய்யனார். இவரது மகன், சிவ சுப்ரமணியம். கடந்த ஆண்டு சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரியில், பல் மருத்துப் படிப்பில் சேர்ந்தார்.
Samayam Tamil govt bus driver rs 10l fine
அரசு பேருந்து ஓட்டுநருக்கு ரூ.10 லட்சம் அபராதம்


அதன் பிறகு ஓராண்டு கடந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பிறகாக விண்ணப்பித்துள்ளார். அதற்காக ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

ஆனால், தேர்வுக் குழு செயலாளர், சிவ சுப்ரமணியம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கும், சென்னையில் உள்ள பி.டி.எஸ் படிப்பை நிறுத்துவதற்கும் நேரடியாக ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளார். அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு முன்பாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டால் கண்டிப்பாக அபராதம் செலுத்துவோம் என்று பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இது தொடர்பாக மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில் புகார் மனு கொடுத்துள்ளார். அதனை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால், மாநில சுகாதார செயலாளரை அணுகி, அபராத தொகையை தவணை முறையில் கட்டுவதற்கும், பாதியாக குறைக்கவும் அவருக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டது.

மேலும், இவர் வாங்கும் சம்பளம் இவரது குடும்பத்தை சமாளிக்கவே போதுமானதாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவ சுப்ரமணியத்தைப் போல் கிட்டத்தட்ட 32 மாணவர்கள் இது போன்று விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி