ஆப்நகரம்

போக்குவரத்து ஊழியா்கள் திடீா் வேலை நிறுத்தம்: பயணிகள் தவிப்பு

சென்னை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் போக்குவரத்து பணியாளா்கள் திடீா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனா்.

Samayam Tamil 4 Jan 2018, 6:56 pm
சென்னை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் போக்குவரத்து பணியாளா்கள் திடீா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனா்.
Samayam Tamil govt bus drivers and conductors strike in tamilnadu
போக்குவரத்து ஊழியா்கள் திடீா் வேலை நிறுத்தம்: பயணிகள் தவிப்பு


தமிழக அரசு போக்குவரத்து பணியாளா்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயா்வு வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு ஊதிய உயா்வு தொடா்பான பேச்சு வாா்த்தை கடந்த சில தினங்களுக்கு முன்னா் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் ஆா்.கே.நகா் இடைத்தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் பேச்சுவாா்த்தை நடத்த முடியாது என்று போக்குவரத்து துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தொிவித்தாா்.



இந்நிலையில் இன்று அமைச்சா் விஜய பாஸ்கா் தலைமையில் மீண்டும் பேச்சு வாா்த்தை தொடங்கியது போக்குவரத்து பணியாளா்கள் 2.57 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்று கோாிக்கை வைத்தனா். ஆனால் அரசு சாா்பில் 2.40 சதவீதம் தான் ஊதிய உயா்வு வழங்க முடியும் என்று அரசு தரப்பில் தொிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து ஆலோசனையில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவா்கள் 2.57 சதவீதம் ஊதிய உயா்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினா். இதனால் 8 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.



பேச்சுவாா்த்தையில் அரசுக்கும், தொழிற்சங்க தலைவா்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடையும் சூழல் நிலவியது. இதற்கு எதிா்ப்பு தொிவித்து போக்குவரத்து ஊழியா்கள் திடீா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூருக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதே போன்று திருச்சிக்கு புறநகா் பகுதிகளில் இருந்து வரக்கூடிய பேருந்துகளும் பணிமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. திடீா் போராட்டத்தால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா். ஊழியா்களின் போராட்டத்தால் பணிமனைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி